திண்டுக்கல்

அரசுப் பேருந்து மோதி பனியன் நிறுவன தொழிலாளி சாவு

DIN

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  அருகே அரசுப் பேருந்து மோதி புதன்கிழமை திருப்பூர் பனியன் நிறுவன தொழிலாளி உயிரிழந்தார்.
 திருப்பூர் நாவிதன் தோட்டம் கணேஷ் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அஜய் (28). இவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் புதன்கிழமை ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கள்ளிமந்தையம் அடுத்துள்ள கள்ளிப் பள்ளம் என்ற இடத்தில் சென்ற போது, எதிரே கோவையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவர் மீது மோதியது. இதில் அஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கள்ளிமந்தையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT