பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பழனி வட்டக் கிளை சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு ஆணை 56-ஐ (அரசாங்கத்தில் ஏற்படும் காலியிடங்களை நீக்குவது) ரத்து செய்ய தமிழக அரசை வலியுறுத்தப்பட்டது. இதற்கு, வட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.ரமேஷ் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார்.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பாக பொருளாளர் ஆறுமுகம், சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக பழனி வட்டாரத் தலைவர் சக்திவேல், சாலைப் பணியாளர் சங்கம் சார்பாக மாவட்ட இணைச் செயலர் வீரய்யா, மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்கம் சார்பாக மாவட்டத் தலைவர் ராமசாமி, வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பாக மாவட்ட இணைச் செயலர் நாகராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.