கொடைக்கானல் அருகே மக்கள் தொடர்பு முகாம்
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான காமனூர் ஊராட்சி மலையக்காடு பகுதியில் உள்ள ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதியில் மக்கள்
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான காமனூர் ஊராட்சி மலையக்காடு பகுதியில் உள்ள ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு ஆதிவாசி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பெறப்பட்ட 122 மனுக்களில் 90-மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.