முகப்பு
திண்டுக்கல்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 250 பேருக்கு கொடுத்த பட்டாவுக்கானஇடத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது 250 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 22 மே, 2018 at 12:35 AM
பகிர்:

திண்டுக்கல்லில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது 250 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்த் தேசிய கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.ஆறுமுகம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 250 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
மதம் மாறிய தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சொந்த வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களை கண்டறிந்து, இலவச வீட்டு மனைப் பட்டாவுடன், வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.