கர்நாடகத்தில் எச்5என்1 வைரஸ் தொற்றால் 44 மயில்கள் இறந்தன!
பறவைக் காய்ச்சலால் கர்நாடகத்தில் 44 மயில்கள் இறந்தது தொடர்பாக...
கர்நாடக மாநிலம், தும்கூர் நகரத்தில் பறவைக் காய்ச்சலால் 44 மயில்கள் இறந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (மே 1) தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் ஏப்ரல் 16 ஆம் தேதி முதன்முதலில் பதிவானதாகவும், அதைத் தொடர்ந்து ஒரு வார காலத்துக்குள் தும்கூர் நகரத்தில் 44 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும் அவர்கள் கூறினர்.
வனத்துறையின் தகவலின்படி, பறவைகளின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டதில், எச்5என்1 வைரஸ் தொற்றுதான் இந்த இறப்புகளுக்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதனிடையே, நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் தும்கூர் நகரத்தில் எந்தப் பகுதியிலும் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Officials stated on Friday (May 1) that 44 peacocks have died due to bird flu in the city of Tumkur, Karnataka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.