திண்டுக்கல்

"கஜா' புயலால் மின் கம்பங்கள் சேதம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

DIN

ஒட்டன்சத்திரம் பகுதியில் "கஜா' புயலால் மின் கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
 "கஜா' புயல் தாக்கியதால் விருப்பாச்சி, அரசப்பப்பிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, காப்பிலியபட்டி, அத்திக்கோம்பை உள்ளிட்ட பல கிராமங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சாரம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பல கிராமங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க போதிய மின்சாரம் விநியோகிக்கப்படுவதில்லை. இதனிடையே கஜா புயலுக்கு முன்பு இருந்த தண்ணீரை வைத்து பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் இன்னும் ஓரிரு நாள்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் தீர்ந்து விட்டதால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின் வாரியம் துரிதமாக செயல்பட்டு முதற்கட்டமாக குடிநீர் தேவைக்கு பயன்படும் மின் விநியோகத்தை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT