திண்டுக்கல்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது

DIN

கொடைக்கானல் அருகே செண்பகனூரில் 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு அருகே உள்ள மற்ற  சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீட்டுக்கு வராதது குறித்து அவரது பெற்றோர் அப் பகுதியில் தேடினர்.
இந்நிலையில் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அப் பகுதியிலுள்ள காட்டு மணி(60) என்பவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிறுவன் உடலில் காயங்களுடன் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்டு  கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியிருந்த காட்டுமணியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுவனுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிந்து காட்டுமணியைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT