திண்டுக்கல்

பழனியில் ஓரே நாளில் 500 திருமணங்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்

DIN

பழனியில் ஆவணி கடைசி முகூர்த்தநாளையொட்டி புதன்கிழமை அடிவாரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதில் திருஆவினன்குடி  குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.  இதனால் அடிவாரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பல இடங்களிலும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் பைபாஸ் குளத்து சாலையில் பிளாட்பாரங்களில் வாகனங்களை நிறுத்தியிருந்தனர். 
மேலும் திருமணத்துக்கு பங்கேற்க வந்தவர்கள் பேருந்து நிலையங்களில் பேருந்துக்காக அலைமோதினர். போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுமண தம்பதியினரும் பல இடங்களில் நடந்தே சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT