திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா

DIN

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காளாஞ்சிப்பட்டி ஊராட்சி பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் அருகே, சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.8 லட்சம் செலவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் நிர்வாகி திருஞானம், திமுக நகர செயலர் ப.வெள்ளைச்சாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் க.பாண்டியராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் மற்றும் வேலுச்சாமி,சௌந்திரபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதே போல் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள முஸ்லிம் ஜமாத் அடக்க ஸ்தலத்தில் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 
இதில் அர.சக்கரபாணி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT