பழனி அருகே சண்முகநதிப் பாலப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து பணியாளர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
பழனியை அடுத்த சண்முகநதி பாலத்தில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பின் பாலம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை பாலத்தில் நடந்த பணிகளுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த கடலூர் மாவட்டம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த காத்தவராயன் மகன் ஜெகதீசன்(41), ஜெனரேட்டரில் இருந்து வந்த மின்வயரை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். விபத்து குறித்து பழனி நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.