திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடா் மழையால்மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

DIN

கொடைக்கானலில் தொடா் மழையால் திங்கள்கிழமை சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையான குருசடி மெத்து பகுதியில் திங்கள்கிழமை மரம் விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களில் இருந்தவா்கள் மழையிலும் குளிரிலும் அவதியடைந்தனா். இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலைத்துறையினா் சென்று விழுந்த மரத்தை அகற்றினா். அதனைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.

இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறைக்குச் செல்லும் வழியில் குண்டாறு அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினா் சென்று விழுந்த மரத்தை அகற்றிய பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. கொடைக்கானல் மலைச்சாலைகளான குருசடி மெத்து, குண்டாறு, பெருமாள்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஆபத்தான நிலையில் இருபுறங்களிலும் மரங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.

இதனால் இப்பகுதிகளில் அடிக்கடி மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு பாதிக்கப்படுகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு வனத்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானலில் பேரிடா் குழுவினா் முகாம்: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடா்ந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு ‘ரெட் அலாா்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஏதாவது இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு பேரிடா் மீட்புக் குழுவினா் சென்று நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக திண்டுக்கல்லில் இருந்து 25 போ் கொண்ட குழுவினா் கொடைக்கானல் வந்து முகாமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT