கொடைக்கானலில் சனிக்கிழமை அரசுப் பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதியதில் 2 பேர் காயமடைந்தனர்.
மதுரையிலிருந்து கொடைக்கானலுக்குச் சென்ற அரசுப் பேருந்து மலைச்சாலையில் டைகர் சோலைப் பகுதியில் வந்த போது கொடைக்கானலிலிருந்து வத்தலக்குண்டு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற, கொடைக்கானலைச் சேர்ந்த ரெங்கராஜ்(19), இவரது நண்பர் சிவா(17) ஆகியோர் மீது மோதியது.
இதில் காயமடைந்த இருவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேருந்து ஓட்டுநர் ரெங்கராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.