திருநெல்வேலியிலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் பயணிகள் ரயில், ஜனவரி 18 முதல் 26 வரை திண்டுக்கல் திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தது: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை - அய்யலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் ஜனவரி 18 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனால், திருநெல்வேலி மயிலாடுதுறை இணைப்பு ரயில் வண்டி எண் 56822 மற்றும் 56821, திண்டுக்கல் - திருச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 24.01.2019 வியாழக்கிழமை ஆகிய நாள்களில் நாகர்கோவில் மும்பை இடையே இயக்கப்படும் வாரம் இருமுறை விரைவு ரயில் வண்டி எண் 16352 காலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 8.25 மணிக்கு புறப்படும்.
அதேபோல், கோயம்புத்தூர் வரை சேவை நீட்டிக்கப்பட்ட வண்டி எண் 56710 மற்றும் 56709 மதுரை -பழனி - மதுரை பயணிகள் ரயில்களின் இயக்கம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.