செம்பட்டி அருகே பெண்ணை தாக்கியவர்கள் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனர்.
செம்பட்டி அடுத்துள்ள பாளையங்கோட்டை கூலம்பட்டியைச் சேர்ந்த நாகமணி (45). அதே ஊரைச் சேர்ந்த பரமேஸ்வரன் (55). இருவரும் ஒசூரில் வேலை செய்த போது குடும்பத்தினரோடு ஒன்றாக வசித்து வந்தனர். அப்போது நாகமணி மனைவி நாகலட்சுமிக்கும், பரமேஸ்ரவன் மகன் செல்வத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாகலட்சுமி மகளுடன் சொந்த ஊருக்கு வந்து விட்டராம். இதற்கிடையில் செல்வம், அவரது அண்ணன் பாலாஜி (36), செல்வத்தின் தாயார் கண்ணம்மாள் (60) மற்றும் உறவினர் அன்னலட்சுமி (30), லட்சுமி (28) ஆகியோர் சேர்ந்து கொண்டு நாகலட்சுமி வீட்டிற்கு சென்று தகராறு செய்து, அவரைத் தாக்கி, அவரது வீட்டின் ஓடு, கதவு ஆகியவற்றைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.