திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதி தொழிலாளி பலி

DIN

ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதியதில் கூலித்தொழிலாளி  உயிரிழந்தார்.
  ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காளாஞ்சிப்பட்டியைச் சேர்ந்த அருணாசலம் மகன் சிவனேசன் (34). இவர் திண்டுக்கல்லில் வழக்குரைஞர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் வியாழக்கிழமை திண்டுக்கல்லில் இருந்து சொகுசு காரில் சிவனேசன் மற்றும் நண்பர் செல்லமுத்து ஆகிய இருவரும் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தனர். காரை சிவனேசன் ஓட்டியுள்ளார்.
  ஒட்டன்தத்திரம்-திண்டுக்கல் சாலையில் லெக்கையன்கோட்டை பேருந்து நிலையம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த லெக்கையன்கோட்டை ஏடி காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுச்சாமி (55) மற்றும் காந்திநகரைச் சேர்ந்த குணசேகரன் (64) ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் பலத்தகாயம் அடைந்தனர். ஆறுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து  சிவனேசனைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT