திண்டுக்கல்

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: மார்ச் 15 இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

DIN

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
      பழனி தண்டாயுதபாணி மலைக் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழா முக்கியமானதாகும். இவ்விழாவை முன்னிட்டு, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான  முருக பக்தர்கள் விரதமிருந்து, கொடுமுடி தீர்த்தம் தரித்து பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். 
      இத்திருவிழா, மார்ச் 15 ஆம் தேதி பழனி திருஆவினன்குடி கோயிலில் காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகின்றன. மார்ச் 20 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும்,  இரவு 9 மணிக்கு மேல் வெள்ளித் தேரில் சுவாமி கிரிவீதி உலாவும் நடைபெறுகிறது. 
     முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருத்தேரோட்டம் மார்ச் 21 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. மார்ச் 24 இல் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு, பழனி மலை கோயிலில் மார்ச் 19 முதல் 23 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு தங்கத் தேர் புறப்பாடு இருக்காது.
     விழா ஏற்பாடுகளை, பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு)  செந்தில்குமார் மற்றும் கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

SCROLL FOR NEXT