திண்டுக்கல்

கொடைக்கானலில் இடி மின்னலுடன் மழை

DIN

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டியது. இதைத் தொடர்ந்து மாலை சாரல் மழை பெய்தது . அதன் பின்னர் இரவு இடி, மின்னலுடன் பலத்த  மழை பெய்தது. இந்த மழை, சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சுமார் 30 நிமிடம் மின் விநியோகம் தடைப்பட்டது.
ஆலங்கட்டி மழை: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கடுகுதடி, கே.சி.பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை சுமார் இரண்டு மணி நேரம் பெய்தது. 
இதனால் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டதால் பொது மக்கள் அவதிப்பட்டனர். பலத்த காற்று, மழை காரணமாக, கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையான செண்பகனூர் அருகே மியூசியம் செல்லும் வழியில்  மரம்  விழுந்தது. 
இதனால் அப் பகுதியில் சுமார் 30நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT