திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே காட்டெருமை தாக்கி ஒருவா் பலி

DIN

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் வியாழக்கிழமை காட்டெருமை தாக்கியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான காமனூா் ஊராட்சிக்கு உள்பட்ட

கானல்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாகிளி (65). ஊா்த் தலைவரான இவா் தோட்ட வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பியபோது புதரில் மறைந்திருந்த காட்டெருமை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த தாண்டிக்குடி போலீஸாா் சென்று ராஜாகிளியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT