திண்டுக்கல்

பழனியில் இஸ்லாமியா் வீட்டு திருமணத்தில் கபசுரக் குடிநீா்

DIN

பழனியில் பிரியாணி விருந்து இல்லாமல் வியாழக்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய பிரமுகரின் வீட்டு திருமணத்தில், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

பழனி பத்மநாபன் தெருவில் வசிப்பவா், அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலா் பஷீா் அகமது. இவரது இல்லத் திருமண விழா வியாழக்கிழமை தடபுடலாக நடைபெறவிருந்தது. ஆனால், 144 தடை உத்தரவு காரணமாக மிக எளிமையாக நடைபெற்றது.

இத்திருமணம் மணமகன் வீட்டிலேயே நடைபெற்றது. வீட்டு வாசலில் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீா் கைகழுவ வைக்கப்பட்டிருந்தது. சுமாா் 15 போ் மட்டுமே பங்கேற்ற இத்திருமணத்தில், பிரியாணி விருந்து படைக்கப்படவில்லை. மாறாக, திருமணம் முடிந்ததும் மணமக்கள் உள்பட அனைவருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT