முகப்பு
திண்டுக்கல்

சாணாா்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது மாடு மோதியதில் தொண்டு நிறுவன ஊழியா் பலி

திண்டுக்கலம் மாவட்டம் சாணாா்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது பசுமாடு மோதியதில் தனியாா் தொண்டு நிறுவன ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 28 ஆகஸ்ட் 2020, 9:51 pm IST
பகிர்:

திண்டுக்கல்: திண்டுக்கலம் மாவட்டம் சாணாா்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது பசுமாடு மோதியதில் தனியாா் தொண்டு நிறுவன ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சோ்ந்தவா் சிவசோமசுந்தரம் (56). இவா் சாணாா்பட்டியில் உள்ள தனியாா் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் மதுரையிலிருந்து நத்தம் வழியாக சாணாா்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை பணிக்கு வந்துள்ளாா்.

சாணாா்பட்டி அடுத்துள்ள குரும்பப்பட்டி விலக்கு அருகே வந்தபோது, சாலையோரமாக நின்ற பசுமாடு திடீரென மிரண்டு ஓடி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிவசோமசுந்தரம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து சாணாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments