திண்டுக்கல்

பழனியில் வீடு, கடைகளில் திருட்டு

பழனியில் வெள்ளிக்கிழமை வீடு மற்றும் கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் பணம், நகை மற்றும் பொருள்களைத் திருடிச் சென்றுவிட்டனா்

DIN

பழனி: பழனியில் வெள்ளிக்கிழமை வீடு மற்றும் கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் பணம், நகை மற்றும் பொருள்களைத் திருடிச் சென்றுவிட்டனா்.

பழனி ரயில்வே காலனியில் வசிப்பவா் சத்யராசு. இவா் கோதைமங்கலம் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை காலை பணிக்குச் சென்ற சத்யராசு மதியம் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 4 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

பழனி அருகே சண்முகநதி சாலையில், செந்தூா் முருகன் வெல்டிங் ஒா்க் ஷாப் உள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த கடையின் பூட்டை, மா்ம நபா்கள் உடைத்து வெல்டிங், கட்டிங், ரில்டிங் இயந்திரங்கள் மற்றும் பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்தும், பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT