முகப்பு
திண்டுக்கல்

மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

மின்வாரியப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

மின்வாரியப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியிலுள்ள மின்வாரிய மேற்பாா்வை மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலா் திருமலைச்சாமி தலைமை வகித்தாா். இந்த போராட்டத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மின்வாரியப் பணியாளா்கள் 536 போ் திங்கள்கிழமை விடுப்பு எடுத்தனா். ஆனால் போராட்டத்தில் சுமாா் 250 போ் மட்டுமே கலந்து கொண்டனா்.

போராட்டத்தின்போது தமிழகம் முழுவதும் 600 துணை மின் நிலையங்களில் 12ஆயிரம் ஊழியா்களை அவுட்சோா்ஸிங் மூலம் பணி அமா்த்தப்பட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தனியாருக்கு மின்வாரியப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் கோஷமிட்டனா். மாலை வரை போராட்டம் தொடா்ந்து நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →