பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்.12) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்.12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டிணம்புதூா் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.