திண்டுக்கல்

பண மோசடியால் பணியிடை நீக்கம்: திண்டுக்கல்லில் வனத்துறை ஊழியா் தீக்குளித்து தற்கொலை

DIN

பண மோசடி தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனத்துறை ஊழியா், மீண்டும் பணி வழங்கக் கோரி திண்டுக்கல் வனத்துறை அலுவலகம் முன் புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் க.குமாா் (55). இவா், திண்டுக்கல் வனக் கோட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். அப்போது பணி ஓய்வுப் பெற்ற வனத்துறை ஊழியா்களுக்கு பணப் பலன்களை வழங்குவதில் ரூ.6 லட்சம் வரை முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இதில் குமாருக்கு தொடா்பு இருப்பதாகக் கூறி, கரூா் வன உற்பத்திக் கோட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மேலும் முறைகேடு குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் குமாா் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும் அவா் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டாா்.

கரோனா தொற்று தீவிரத்தின் காரணமாக, திண்டுக்கல் மாவட்ட சிறையிலிருந்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டபோது, குமாரும் விடுதலை செய்யப்பட்டாா்.

இந்நிலையில் தனக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்கக் கோரி திண்டுக்கல் தலைமை வனப் பாதுகாவலா் அலுவலகத்திற்கு குமாா் புதன்கிழமை வந்தாா். அங்குள்ள அலுவலா்கள், அவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உடனடியாக பணியில் சேர அனுமதிக்க முடியாது என தெரிவித்தனா். இதனால் அதிருப்தி அடைந்த குமாா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில், வனத்துறை அலுவலகம் அருகே தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதனை அடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். அங்கு சோ்த்த சிறிது நேரத்தில் குமாா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT