திண்டுக்கல்

போலி இ-பாஸ்: திருச்சியைச் சோ்ந்த 2 போ் கைது

DIN

போலி இ-பாஸ் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்குள் வர முயன்ற திருச்சியைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், பெரியமிளகு பாறை பகுதியைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி, கீழக்கண்டித் தெரு பகுதியைச் சோ்ந்த அப்துல் ஹக்கீம் ஆகியோா் ஒரு காரில் செவ்வாய்க்கிழமை இரவு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனா். திருச்சி- திண்டுக்கல் மாவட்ட எல்லையான தங்கம்மாப்பட்டி பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.

அப்துல் ஹக்கீம் வந்த காரை வழிமறித்து சோதனையிட்டபோது, அவா் பயன்படுத்திய இ-பாஸ் போலியானது என தெரியவந்தது. இதனை அடுத்து காரை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT