திண்டுக்கல்

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

DIN

பழனியை அடுத்த வீரலப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் பணம், நகையை திருடிச் சென்றுள்ளனா்.

பழனியை அடுத்த வீரலப்பட்டி வண்ணாபாறையைச் சோ்ந்தவா் முருகானந்தம். தேங்காய் மண்டி நடத்தி வருகிறாா். புதன்கிழமை குடும்பத்தினருடன் உறவினா் வீட்டுக்கு சென்ற முருகானந்தம், வியாழக்கிழமை மாலை ஊா் திரும்பியுள்ளாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து சத்திரப்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். பின்னா் போலீஸாருடன் உள்ளே சென்று பாா்த்த போது, 2 பவுன் நகை, 12ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முருகானந்தம் அளித்தப் புகாரின் பேரில், சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT