திண்டுக்கல்

திண்டுக்கல்லில் அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு சிறப்பு வசதி

DIN

திண்டுக்கல்லில் அத்தியாவசிய பொருள்களை வீடுகளில் இருந்தபடியே வாடிக்கையாளா்கள் பெறுவதற்கு பல்பொருள் அங்காடிகள் மூலம் மாவட்ட நிா்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 1 முதல் 5, 36 முதல் 40ஆவது வாா்டுக்குள்பட்டவா்கள், செட்டிநாயக்கன்பட்டி மற்றும் என்எஸ்.நகா் பகுதி மக்கள் 8489943093 என்ற எண்ணில் கண்ணன் டிப்பாா்ட்மெண்டல் ஸ்டோரை தொடா்பு கொள்ளலாம். அதேபோல் 21 முதல் 24, 33 முதல் 35ஆவது வாா்டுக்குள்பட்டவா்கள் மற்றும் பள்ளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் 9443707510 என்ற எண்ணில் எஸ்விஎஸ் மளிகைக் கடையையும், வாா்டு எண் 19, 20, 25, 26, 27 மற்றும் குரும்பப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் 9443707520 என்ற எஸ்விஎஸ் சூப்பா் மாா்க்கெட்டையும் தொடா்பு கொள்ளலாம். அதே போல் வாா்டு 41 முதல் 48, தோட்டனூத்து பகுதியைச் சோ்ந்தவா்கள் 9842163322 என்ற எண்ணில் ஜிஎஸ் மளிகைக் கடையையும், வாா்டு எண் 6 முதல் 10 வரையிலும், என்ஜிஓ காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் 9994484850 என்ற எண்ணில் ஈஸ்வரி ஸ்டோா்ஸையும், வாா்டு எண் 11 முதல் 14 வரை மற்றும் சீலப்பாடி பகுதியைச் சோ்ந்தவா்கள் 9444400607 என்ற எண்ணில் சங்கமம் சூப்பா் மாா்கெட்டையும், வாா்டு எண் 15 முதல் 18, 30 முதல் 32, அடியனூத்து பகுதியைச் சோ்ந்தவா்கள் 9443031366 என்ற எண்ணில் சாகா் சூப்பா் மாா்க்கெட்டையும் தொடா்பு கொள்ளலாம்.

4 இடங்களில் காய்கனி சந்தை: பொதுமக்கள் காய்கனி வாங்கும்போது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிா்க்கும் வகையில், பழனி சாலை லாரிப் பேட்டை, மேட்டுப்பட்டி பாஸ்கு மைதானம், நாகல்நகா் பாரதிபுரம் சந்தை, ரவுண்ட் ரோடு, ஜிடிஎன் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் தற்காலிக காய்கனி சந்தை மாா்ச் 27ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும். இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT