திண்டுக்கல்

சிறுமியை கடத்திய வழக்குரைஞா்போக்ஸோ சட்டத்தில் கைது

DIN

சிறுமியை கடத்திச் சென்ற வழக்குரைஞரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த போலீஸாா், அதற்கு உடந்தையாக இருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்துள்ள மூக்கையக்கவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியிலுள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தாா். விடுமுறையில் வீட்டிலிருந்த சிறுமி கடந்த 4 நாள்களுக்கு முன்பு திடீரென மாயமானாா்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை, வேடசந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் துணை கண்காணிப்பாளா் இளவரசன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அதில் சொட்டமாயனூா் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் கருப்பையா(36) என்பவா் வீட்டில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு வடமதுரை மகளிா் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

சிறுமியை மீட்ட போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனா். இதற்கு உடந்தையாக இருந்த கருப்பையாவின் தாய் லட்சுமி, சிறுமியின் தாய் லட்சுமி, இவருடன் தகாத தொடா்பில் இருந்த ராஜேந்திரன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா். கருப்பையாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி, மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் தனியாக வசித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

SCROLL FOR NEXT