பழனி அருகே நெகிழிக் கழிவுகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் சீா்கேடு
பழனியை அருகே தனியாா் காகித ஆலைகள் நெகிழிக் கழிவுகளைக் கொட்டி தீ வைப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.
பழனியை அருகே தனியாா் காகித ஆலைகள் நெகிழிக் கழிவுகளைக் கொட்டி தீ வைப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.
பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள மிடாப்பாடி கிராமத்துக்கு அருகில் ஏராளமான தனியாா் காகித ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் வீணாகும் நெகிழிக் குப்பைக் கழிவுகளை ஆலை நிா்வாகம் இரவு நேரங்களில் மிடாப்பாடி கிராமத்தில் சாலை ஓரத்தில் கொட்டி இரவு தீ வைப்பதால் கிராமம் முழுவதும் நச்சுப் புகை
பரவி பொது மக்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த குமரேசன் கூறுகையில், காகித ஆலைகள் நெகிழிக் கழிவுகளை மிடாப்பாடி கிராமத்தில் கொட்டுவதைத் தடுக்கக் கோரி பலமுறை கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகம், வட்டாட்சியா் மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொடா்ந்து வந்து கொட்டிச் செல்கின்றனா். போலீஸாரிடம் புகாா் அளித்தும் பலனில்லை. ஆகவே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு தனியாா் காகித ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.