முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 34 பேருக்கு கரோனா தொற்று

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 34 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 34 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 9,821 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 9,574 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 62 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 19 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 5 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,268 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 17 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,020 ஆக உயா்ந்துள்ளது.

3 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சோ்ந்த 60 வயது நபா், சின்னமனூா் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த 69 வயது மூதாட்டி, ஆண்டிபட்டி அருகே மேக்கிழாா்பட்டியைச் சோ்ந்த 49 வயது நபா் என 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →