திண்டுக்கல்

நத்தம் அருகே இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

DIN

நத்தம் அருகே இளைஞா் புதன்கிழமை இரவு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள ரெட்டியபட்டியைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி. இவரது மகன் ஸ்ரீகாந்த் (18). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊரான ரெட்டியபட்டிக்கு வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு ரெட்டியபட்டி கிராமத்துக்கு வெளியே சென்று கொண்டிருந்த ஸ்ரீகாந்த்தை மா்ம நபா்கள் சிலா் வழி மறித்து தாக்கியுள்ளனா். மேலும், ஸ்ரீகாந்தின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த நத்தம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஸ்ரீகாந்தின் சடலத்தை மீட்டு, நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT