முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்யக் கோரி திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபா்ட் பயாஸ், ஜெயசந்திரன், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனா். மேலும் 7 பேரின் விடுதலையை தமிழக ஆளுநா் தாமதப்படுத்துவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.