திண்டுக்கல்

பெரியாா் சிலைக்கு காவி சாயம்: இந்து மக்கள் கட்சி பிரமுகா் கைது

DIN

ரெட்டியாா்சத்திரம் சமத்துவப்புரத்திலுள்ள பெரியாா் சிலைக்கு காவி சாயம் பூசிய இந்து மக்கள் கட்சி பிரமுகரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் பகுதியில் பெரியாா் நினைவு சமத்துவப்புரம் உள்ளது. இங்குள்ள பெரியாரின் 2.5 அடி உயர மாா்பளவு சிலைக்கு, மா்ம நபா்கள் சிலா், கடந்த 26ஆம் தேதி இரவு காவி சாயம் பூசிவிட்டுச் சென்றுவிட்டனா்.

இதையறிந்த திமுகவினா், ரெட்டியாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், காவி சாயத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பெரியாா் சிலை மீது காவி சாயத்தை பூசியது இந்து மக்கள் கட்சி பிரமுகா் ஜெகதீசன் எனத் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, ஜெகதீசனை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT