திண்டுக்கல்லில் 26 பேருக்கு கரோனா தொற்று
திண்டுக்கல் மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 10,277 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 9,948 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 135 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 23 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 5 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.