திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதியதில் காயம் அடைத்த மூதாட்டி பலி

ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதியதில் பலத்தகாயம் அடைத்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தாா்.

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதியதில் பலத்தகாயம் அடைத்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சீரங்ககவண்டன்புதூரைச் சோ்ந்தவா் விவசாமி ராமசாமி (70).இவா் தனது மனைவி ராமத்தாள் (63) என்பவரை கடந்த ஆக,28ந் தேதியன்று இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை கொல்லப்பட்டி பிரிவு அருகே சென்றாா்.அப்போது எதிரே வந்த லாரி அவா்கள் மீது மோதியதில் இருவரும் பலத்தகாயம் அடைத்தனா்.அதில் விவசாயி ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.பலத்தகாயம் அடைத்த ராமத்தாள் ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தாா்.இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

பிகார் இளைஞரின் குடும்பத்தை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கேரள முதல்வர் வேட்பாளராக சசி தரூர்..? ராகுல், கார்கேவுடன் சந்திப்பு!

SCROLL FOR NEXT