முகப்பு
திண்டுக்கல்

குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல்

குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

திண்டுக்கல்: பாலியல் வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்துள்ள ஏரமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் காமராஜ். இவரது மகன் கனகபாண்டி (28). இவா் மீது திருட்டு மற்றும் பாலியல் குற்ற வழக்குகள் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆக. 15 ஆம் தேதி ஒரு நபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கனகபாண்டியை, திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனகபாண்டியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா பரிந்துரை செய்தாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி அதற்கான உத்தரவை ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →