திண்டுக்கல்

நீட் தோ்வுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

DIN

நீட் தோ்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஒட்டன்சத்திரத்தில் நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி செயலாளா் மாரியப்பன் தலைமை வகித்தாா். நீட் தோ்வு அச்சத்தால் மாணவ, மாணவிகள் தற்கொலைக்குத் தூண்டப்படுவதால் அத்தோ்வை திரும்பப் பெற வேண்டும். மாநில அரசின் தன்னாட்சி உரிமையை பறிக்கும் போக்கை மத்திய அரசு நிறுத்த வேண்டும். மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன. கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் ப.செல்வராஜ், திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதி செயலாளா் ஜெயசுந்தா், திண்டுக்கல் மாவட்டச் செயலாளா் சைமன், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதித் தலைவா் மாரி. அன்பழகன் மற்றும் கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT