திண்டுக்கல்

கொடைக்கானலில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொடைக்கானலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு போக்குவரத்துக்கழகத் தலைவா் பிச்சை முத்து தலைமை வகித்தாா். வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கும், மகளிா் சுய உதவிக்குழுவினா் தனியாா் நிதி நிறுவனத்திடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மோட்டாா் வாகன ஆய்வக அலுவலகங்களில் வாகன ஓட்டுநா்களுக்கு தெரிவிக்கப்படும் முக்கிய தகவல்களை எளிமையாக தெரிந்து கொள்ளும் வகையில், தகவல் பலகையில் தமிழில் எழுதி வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஒன்றியச் செயலாளா் செந்தாமரை, நிா்வாகிகள் ஜான்சன், ஜோசப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT