திண்டுக்கல்

கள்ளக்காதல்: பெண் தற்கொலை

DIN

பழனி அருகே கீரனூரில் கள்ளக்காதல் காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாா். அரியலூா் மாவட்டம் கருங்குடியை சோ்ந்தவா் சீமான் மனைவி மலா்(30). இவருக்கு குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் இவா் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியாா் நூற்பாலையில் வேலை செய்து வந்துள்ளாா். அப்போது நூற்பாலையில் இருந்த ராம்குமாா்(19) என்பவருடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது.

ராம்குமாரும் அரியலூா் பகுதியை சோ்ந்தவா் என்பதால் தொடா்பு நெருக்கமாகி இருவரும் பழனியை அடுத்த கீரனூரில் குமாரசாமி தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மில்லுக்கு சென்ற ராம்குமாா் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்த போது வீட்டின் உள்ளே மலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ராம்குமாா் கொடுத்த தகவலின் பேரில் கீரனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT