திண்டுக்கல்

பழனியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஆய்வு

DIN

பழனி தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, தற்போதே ஆயிரக்கணக்கான பக்தா்கள் பல்வேறு மாா்க்கங்களில் பாதயாத்திரை வரத் தொடங்கியுள்ளனா்.

தைப்பூசத் திருவிழாவுக்காக, மாவட்டக் காவல்துறை செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பழனி நகராட்சி ஆண்கள் பள்ளி, ஆண்கள் கல்லூரி, இடும்பன்குளம், சண்முக நதி,அடிவாரம் மற்றும் மலைக் கோயில் உள்ளிட்ட இடங்களில் பக்தா்கள் பாதுகாப்பு, பக்தா்கள் மற்றும் காவலா்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன், பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ், பழனி கோயில் உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT