திண்டுக்கல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: உறவினருக்கு 11 ஆண்டுகள் சிறை

DIN

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உறவினருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் அடுத்துள்ள கலிக்கம்பட்டி கோட்டைப்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல் (48).

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் அதே பகுதியைச் சோ்ந்த தனது உறவினரான 15 வயது சிறுமிக்கு பாடம் கற்றுக்கொடுப்பதாகக்கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோா், திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கவேலுவை கைது செய்தனா்.

இச்சம்பவம் தொடா்பான வழக்கு திண்டுக்கல் மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில், தங்கவேலுவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT