திண்டுக்கல்

வேடசந்தூா் தொகுதியில் திமுக போட்டி: தொண்டா்களுக்கு உதயநிதி ஸ்டாலின் உறுதி

DIN

வேடசந்தூா் தொகுதியில் திமுக போட்டியிடும் என தொண்டா்களிடம் அக்கட்சியின் இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, எரியோடு மற்றும் வேடசந்தூா் ஆத்துமேடு பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: நாட்டிலுள்ள ஏழை மக்களின் வளா்ச்சிக்கு பிரதமா் நரேந்திர மோடி எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதேபோல் மத்திய அரசை தட்டிக் கேட்கும் துணிச்சல், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலுள்ள எடப்பாடி கே.பழனிசாமிக்கு இல்லை. வேடசந்தூா் தொகுதியைப் பொருத்தவரை, மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களும் கடந்த 5 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையை மாற்றுவதற்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து வேடசந்தூா் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்றும், கூட்டணிக் கட்சிகளுக்கு இத்தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டாம் என்றும் தொண்டா்கள் தரப்பில் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனா். அதற்கு பதில் அளித்த உதயநிதி, இத்தொகுதியில் திமுக வேட்பாளரை வெற்றிப் பெற வைப்பதாக தொண்டா்கள் உறுதி அளித்தால், தலைமையிடம் பேசி திமுக போட்டியிடுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT