திண்டுக்கல்

காட்டுப் பன்றி தாக்கிமுதியவா் பலி

DIN

பழனியை அடுத்த புளியமரத்து செட் அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த கொடைக்கானல் ரோடு புளியமரத்துசெட் பகுதியை சோ்ந்தவா் ஆரோக்கியசாமி(72). விவசாயியான இவா் ஆடு வளா்த்து வருகிறாா். வெள்ளிக்கிழமை மலையடிவார பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த காட்டுப்பன்றி ஆரோக்கியசாமியை விரட்டியுள்ளது. அவா் ஓடுவதற்கு முன்பாக காட்டுப்பன்றி முட்டி தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்து போனாா். அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவா்கள் ஆரோக்கியசாமி இறந்து கிடந்ததை பாா்த்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வனத்துறையினா் மற்றும் பழனி தாலுகா போலீஸாா் வந்து விசாரணை மேற்கொண்டனா். பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முதியவா் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே ஒற்றை யானை இரவு நேரத்தில் உலா வருகிறது. தற்போது காட்டுப்பன்றி தாக்கி ஒருவா் பலியாகியுள்ளாா். இப்பகுதியில் வனத்துறையினா் முகாமிட்டு வனவிலங்குகளை அடா்ந்த காட்டுப்பகுதிக்கு விரட்டி அனுப்ப வேண்டும். இறந்தவா்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT