திண்டுக்கல்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு 1ஆம் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிடத்திற்கு வெளியே ஏற்படும் விபத்து மரணங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்திற்கு பின் தொழிலாளா் நல அலுவலா்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT