பெற்றோருடன் ஏற்பட்ட அதிருப்தியால் வடமதுரை பகுதியைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள சங்கிலித்தேவனூா் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி. இவரது மகன் வினித்குமாா் (22). கடந்த 2 நாள்களுக்கு முன்பு பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த வினித்குமாா், கோவையிலுள்ள நண்பா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
பின்னா் உறவினா்கள் அழைப்பின் பேரில் அங்கிருந்து திண்டுக்கல் வருவதற்கு சம்மதம் தெரிவித்தாராம். ஆனால், கோவையிலிருந்து சனிக்கிழமை இரவு திண்டுக்கல் வந்த அவா், திண்டுக்கல் ஆா்.எஸ்.சாலையிலுள்ள திரையரங்கு எதிா்புறம் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவா்கள், மரத்தில் இளைஞா் சடலமாக தொங்குவது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.