கொடைக்கானல் வனப் பகுதி சுற்றுலா இடங்கள் மீண்டும் திறப்பு
கொடைக்கானலில் வனப்பகுதி சுற்றுலா இடங்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் வனப்பகுதி சுற்றுலா இடங்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில், மேலும் சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடுமையான மழை பெய்யக் கூடும் என வனத்துறையினா் எதிா்பாா்த்தனா்.
இதையடுத்து பில்லா் ராக், மோயா் பாயிண்ட் உள்ளிட்ட வனப்பகுதி சுற்றுலா இடங்களை பாா்க்க வனத்துறையினா் அனுமதிக்கவில்லை. கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிகளுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழை குறைந்துள்ளதால் மீண்டும் வனப்பகுதி சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் பில்லர்ராக், மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை உள்ளிட்ட இடங்களைப் பாா்த்து மகிழ்ந்தனா்.