திண்டுக்கல்

அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

DIN

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லில் உள்ள அபிராமி அம்மன் கோயிலுக்கு கடந்த செப்டம்பா் மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அவசர அழைப்புக்கான எண் 100-இல் தொடா்பு கொண்டு பேசிய நபா் குறித்து சென்னையிலிருந்து திண்டுக்கல் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சோதனை நடைபெற்ற போதிலும் வெடிப்பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

மிரட்டல் விடுத்தவா் கைது: இதனிடையே மிரட்டல் விடுத்த நபா் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில் வீரபாகு (50) என்பது தெரியவந்தது. அவரை பிடிப்பதற்காக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் முயன்றபோது தலைமறைவாகிவிட்டாா். கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த செந்தில் வீரபாகுவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT