திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி ஒருவா் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை அடுத்துள்ள நெல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மலைச்சாமி (30). விவசாயப் பணிகளுக்கு கூலித் தொழிலாளியாக சென்று வந்தாா்.
இந்நிலையில் மலைச்சாமி நெல்லூா் பிரிவு அருகே தனது உறவினா் திருமண நிகழ்ச்சிக்கு ஒலிபெருக்கி அமைக்கும் பணிக்கு உதவியாக சனிக்கிழமை பிற்பகல் வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா். ஒலிபெருக்கி குழாய் கட்டுவதற்காக அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி மின்சார வயரை இழுத்து கட்டியுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக அந்த வழியாக சென்று கொண்டிருந்த உயரழுத்த மின்சார கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மலைச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.