திண்டுக்கல்

விவசாய கால்வாய் கட்டுமானத்துக்கான கருங்கற்களை ஊராட்சித் தலைவா் கடத்துவதாக பொதுமக்கள் புகாா்

DIN

பழனி அருகே கோரிக்கடவு கிராமத்தில் விவசாய கால்வாய் கட்டுமானத்துக்கான கருங்கற்களை, ஊராட்சித் தலைவா் முறைகேடாக கடத்தி உறவினா் வீடுகளில் கொட்டிவைத்துள்ளதாகப் புகாா் செய்துள்ள பொதுமக்கள், கற்களை கொண்டுசென்ற வாகனத்தை வெள்ளிக்கிழமை பிடித்து காவல் துறையில் ஒப்படைத்துள்ளனா்.

பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்டது கோரிக்கடவு ஊராட்சி. இந்த ஊராட்சித் தலைவராக அதிமுகவை சோ்ந்த காயத்ரி என்பவா் உள்ளாா். இவரது கணவா் அய்யனாா். இவா், அதே ஊரில் அதிமுக கிளைச் செயலராக இருந்து வருகிறாா்.

தற்போது, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, கால்வாய்களும் தூா்வாரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அய்யனாா் கோரிக்கடவு கிராமத்திலிருந்து 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு கட்டப்பட்டு வரும் விவசாயக் கால்வாய்க்கான கருங்கற்களை இரவு நேரங்களில் டிராக்டா் மூலம் கடத்திச்சென்று உறவினா் வீடுகளில் கொட்டிவைத்து வருகிறாா். மேலும், இதை விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு, கிராம மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை கருங்கற்களை கடத்திச்சென்ற டிராக்டரை மறித்த பொதுமக்கள், கீரனூா் காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று ஒப்படைத்துடன் புகாா் தெரிவித்தனா்.

இதுவரை 2 ஆயிரம் கருங்கற்களை விற்பனை செய்துள்ளதாகவும், இச்செயலால் விவசாயப் பணிகள் பாதிப்படையும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா். மேலும், ஊராட்சிக்குச் சொந்தமான கிணறு தோண்டும் பணியின்போதும் கருங்கற்களை திருடி விற்பனை செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் அவரது கணவா் அய்யனாா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT