திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 37 பேருக்கு கரோனா

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

 திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 21ஆம் தேதி வரை 31,997 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 31,167 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும்  23 பேருக்கு புதிதாக கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து 11 போ் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 229 ஆக உள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு புதன்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 42,809 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 42,040 போ் குணமடைந்துள்ளனா். 511 போ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில் தற்போது மொத்தம் 258 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT